சுட்டெரிக்கும் வெயில்! மக்களுக்கு புதிய எச்சரிக்கை
Apr 18, 2023 55 views Posted By : YarlSri TV
சுட்டெரிக்கும் வெயில்! மக்களுக்கு புதிய எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல், மொனராகலை மாவட்ட மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில பகுதிகளில், வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், அதிக அளவில் இருப்பதைக் காட்டுகிறது.
இந்த நிலையில், பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கின்றது..
வீடுகளில் இருக்கும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளவும் திணைக்களம் கூறுகிறது.
சிறிய குழந்தைகளை தனியாக வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பெரியவர்களை கேட்டுக் கொள்கிறது.
மேலும், வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், நிழலான இடங்களில் தங்கவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பின் மூலம் கோரியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago