Skip to main content

பண்ணை அம்மன் சிலையை அகற்றும் வழக்கு ஒத்திவைப்பு

Apr 18, 2023 65 views Posted By : YarlSri TV
Image

பண்ணை அம்மன் சிலையை அகற்றும் வழக்கு ஒத்திவைப்பு 

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இந்த வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் முன்னிலையாகினார். ஏனைய பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.



சிலை வைப்பதற்கு தடையில்லை, எனினும், அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.



என்.சிறிகாந்தா, எம்.ஏ.சுமந்திரனின் வாதத்தையடுத்து, எதிர்வரும் மே 4ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை