Skip to main content

இலங்கையில் 8 மாவட்டங்களுக்கு அதிஉயர் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!!

Apr 17, 2023 67 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் 8 மாவட்டங்களுக்கு அதிஉயர் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!! 

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



குறித்த மாவட்டங்கள் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள் வெப்பத்தால் பாதிக்கப்படலாம், சோர்வு மற்றும் வெயிலில் தொடர்ந்து செயல்படுவது வெப்ப பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறது.



முடிந்தவரை நிழலில் ஓய்வெடுக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



இதேவேளை, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் வெப்ப எச்சரிக்கை பிரதேசங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை