Skip to main content

துபாய் தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் பலி

Apr 17, 2023 95 views Posted By : YarlSri TV
Image

துபாய் தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் பலி 

துபாயின் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 



அக்கட்டிடத்தின் 4-வது மாடியில் தீப்பிடித்தது.   தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. 



இதனால் கட்டிடத்தில் தீ மற்றும் புகை சூழ்ந்ததால் மக்கள் வெளியேறாமல் சிக்கினர். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்டு குழுவினர் அங்கு விரைந்து வந்து கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேறினர். 



கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.



இந்த விபத்தில் 16 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. தமிழகத்தை சேர்ந்த 2 ஆண்கள், கேரளாவை சேர்ந்த தம்பதி ஆகியோர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 



பலியானவர்களில் தமிழகத்தை சேர்ந்த அப்துல் காதர், சாலியாகுண்ட், கேரள மலப்புரம் வெங்கரையை சேர்ந்த ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி என்பது அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 



தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று துபாய் குடிமை தற்காப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்படு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை