Skip to main content

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீச்சு.. பெரும் பதற்றம்..

Apr 15, 2023 88 views Posted By : YarlSri TV
Image

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீச்சு.. பெரும் பதற்றம்..  

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்த போது அவரை நோக்கி ஒருவர் கையெறி குண்டை வீசினார். 



குண்டு வெடித்தததில் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார்.



ஜப்பானில் பிரதமராக இருந்த ஷின்சோ அபே தனது பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடோ பதவியேற்றார். 



இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷின்சோ அபே பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த போது, முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் ஷின்சோ அபேவை  சுட்டுக்கொன்றார். 



இந்த நிலையில், ஜப்பானில் மீண்டும் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக  ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவரை நோக்கி வெடி குண்டு வீசப்பட்டுள்ளது.

 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை