Skip to main content

அதிக வெப்பம் குறித்து மில்கோ விடுத்துள்ள எச்சரிக்கை

Apr 13, 2023 67 views Posted By : YarlSri TV
Image

அதிக வெப்பம் குறித்து மில்கோ விடுத்துள்ள எச்சரிக்கை 

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கால்நடைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளூர் பால் உற்பத்தி நிறுவனமான மில்கோ, கால்நடை பண்ணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



இன்றும் நாளையும் மேல், தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுவதாக மில்கோ அறிவித்துள்ளது.



இதன் மூலம், கால்நடை வளர்ப்பாளர்களை தங்கள் கால்நடைகளை காப்பகங்களுக்குள் வைப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், இந்த காலகட்டத்தில் குடிப்பதற்கு போதுமான தண்ணீரை வழங்குமாறும் மில்கோ வேண்டுகோள் விடுத்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை