புகையிரதத்தில் மோதி 5 பிள்ளைகளின் தந்தை உடல் நசுங்கி பலி
Apr 12, 2023 62 views Posted By : YarlSri TV
புகையிரதத்தில் மோதி 5 பிள்ளைகளின் தந்தை உடல் நசுங்கி பலி
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வரதராசா எனும் 45 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
கடற்தொழிலில் ஈடுபடும் இவர் மது போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார்.
வழமையாக காலையில் கடலுக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் இவர், சில நாட்களில் இரவு நேரத்திலும் கடலுக்கு சென்று வருவார்.
சம்பவ தினமான நேற்றிரவு அதிக போதையுடன் கடலுக்கு செல்வதாக கூறிச்சென்ற இவர், ஜீவபுரம் புகையிரத பாதையில் அமர்ந்திருந்த போது, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரதம் வந்துள்ளது.
எனினும் புகையிரதம் வருவதை கண்டு எழுந்து செல்ல முயற்சித்தபோதும், அதிக போதை சுயகட்டுப்பாட்டை இழக்க வைத்ததால் அவ்விடத்திலேயே புகையிரதத்தில் மோதுண்டு தலை, கழுத்து, நெஞ்சு பகுதிகள் புகையிரதத்தில் சிக்கி கை, கால்கள் உடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இவரது சடலத்தை ஆடைகளை வைத்தே உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
சடலம், அதே புகையிரதம் மூலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று (12) சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago