Skip to main content

யாழ்ப்பாணத்தில் சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்புணர்வு! அதிர்ச்சி சம்பவம்

Apr 08, 2023 59 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணத்தில் சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்புணர்வு! அதிர்ச்சி சம்பவம் 

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.



பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றச்சாட்டப்பட்டவர்களும் அதே இடத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.



போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே 14 வயதுச் சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.



பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளைகளிலேயே சந்தேக நபர்கள் இந்ந செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.



பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சந்தேக நபர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை