தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க மு.க ஸ்டாலின் கோரிக்கை !
Sep 21, 2022 71 views Posted By : YarlSri TV
தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க மு.க ஸ்டாலின் கோரிக்கை !
இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியறுத்தி வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர ஏற்கனவே 95 படகுகளும் 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago