Skip to main content

மார்ச் மாதம் மாகாணசபைத் தேர்தல்- தேர்தல்கள் ஆணைக்குழு

Sep 21, 2022 63 views Posted By : YarlSri TV
Image

மார்ச் மாதம் மாகாணசபைத் தேர்தல்- தேர்தல்கள் ஆணைக்குழு 

தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.



எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்பாக தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.



யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இராஜேந்திரன் கிறிஸ்ரி அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தேர்தல் ஆணையாளர் நாயகம், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் சமன் ஸ்ரீ ரத்னநாயக்க, யாழ் மாவட்ட செயலர் மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதிதுவபடுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பிராந்திய ஊடகவியலாளர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை