எகிப்து ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் சந்திப்பு!
Sep 20, 2022 57 views Posted By : YarlSri TV
எகிப்து ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் சந்திப்பு!
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்இ அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் ஃபத்தாஹ் அல்சிசியை கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை பாராட்டுவதாக கூறிய அவர் பாதுகாப்புத்துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது பெரிய சாதனை என்றும் தெரிவித்தார்.
இராணுவ ஒத்துழைப்பு கூட்டுப்பயிற்சியில் கவனம் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் தளவாடங்களின் பராமரிப்பு ஆகிய துறைகளில் மேலும் வலுவாக செயற்படுவது என்று இரு தலைவர்களும் அப்போது ஒப்புக்கொண்டனர்.
பயங்கரவாதத்திற்கு எதிராக எகிப்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராடடு தெரிவித்தார். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் எகிப்தும் சிறந்த முறைகளில் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று எகிப்து ஜனாதிபதி உறுதியளித்தார்.
ஆபிரிக்க நாடுகளில் இந்தியாவில் முக்கிய வர்த்தக நண்பனாக எகிப்து திகழ்கிறது என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் பெருமளவில் விரிவடைந்துள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago