Skip to main content

நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு!

Sep 20, 2022 77 views Posted By : YarlSri TV
Image

நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு! 

வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை என அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.



இதேநேரம் ஒரு சில தட்டுப்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் உரியவாறு முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார லியனகே தெரிவித்துள்ளார்.



தட்டுப்பாடு நிலவிய மருந்துக்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை