அர்ஜென்டினா வீராங்கனை நாதியா அரையிறுதியில் !
Sep 17, 2022 73 views Posted By : YarlSri TV
அர்ஜென்டினா வீராங்கனை நாதியா அரையிறுதியில் !
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, அர்ஜென்டினா வீராங்கனை நாதியா பொடரோவ்ஸ்கா தகுதி பெற்றார். காலிறுதியில் கனடாவின் யூஜெனி பவுச்சார்டுடன் (28 வயது, 902வது ரேங்க்) நேற்று மோதிய நாதியா (25 வயது, 298வது ரேங்க்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் விளையாடியபோது பவுச்சார்டுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் பவுச்சார்டு தடுமாற, அதை நன்கு பயன்படுத்தி புள்ளிகளைக் குவித்த நாதியா 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. யூஜெனி - நாதியா மோதிய காலிறுதி ஆட்டத்தை, முன்னாள் நட்சத்திர வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் நேற்று நேரில் பார்த்து ரசித்தார். 2வது செட்டின்போது கனமழை கொட்டியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago