Skip to main content

பல குழுக்களாக வேட்டையில் களமிறங்கியுள்ள காவல்துறை- சிக்காத ஜோன்ஸ்டன்!

Jun 07, 2022 64 views Posted By : YarlSri TV
Image

பல குழுக்களாக வேட்டையில் களமிறங்கியுள்ள காவல்துறை- சிக்காத ஜோன்ஸ்டன்! 

அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்த போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கு பல குழுக்களைக் கொண்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



காவல்துறையின் பல குழுக்கள்



பல குழுக்களாக வேட்டையில் களமிறங்கியுள்ள காவல்துறை- சிக்காத ஜோன்ஸ்டன்!



பல குழுக்கள் அனுப்பட்டபோதும், சி.ஐ.டி.யினரால் இதுவரை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனினும் அவரைக் கண்டுபிடிக்க பல காவல்துறை குழுக்கள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.



தலைமறைவான ஜோன்ஸ்டன்



பல குழுக்களாக வேட்டையில் களமிறங்கியுள்ள காவல்துறை- சிக்காத ஜோன்ஸ்டன்!



தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரின் பெயரை சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.



இதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹிந்த கஹந்தகமவை ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை