Skip to main content

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும்!

Oct 19, 2022 68 views Posted By : YarlSri TV
Image

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும்! 

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும் என சட்டக்கல்வி பேரவை தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.



தாய்மொழியில் சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையை எழுத அனுமதிக்குமாறு சட்டக்கல்வி மாணவர்கள் சிலர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பப்பட்டது.



இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஷ, சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்படும் என சட்டக் கல்வி ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.



எவ்வாறாயினும் ஆங்கில மொழியிலேயே சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சை நடத்தப்படும் என மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் சட்டக்கல்வி பேரவையுடன் மீண்டும் கலந்துரையாடவிருப்பதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை