Skip to main content

மலேசியாவில் வேலைவாய்ப்பு – மலையக இளைஞர்களுக்கு முன்னுரிமை!

Oct 18, 2022 68 views Posted By : YarlSri TV
Image

மலேசியாவில் வேலைவாய்ப்பு – மலையக இளைஞர்களுக்கு முன்னுரிமை! 

எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மலேசிய உயர் ஸ்தானிகர் டடோ டன் யங் தாய் தெரிவித்துள்ளார்.



அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் டடோ டன் யங் தாயை நேற்று அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



இலங்கையில் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள மறைமுகமாக செயற்பட்ட குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.



அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோவின் வேண்டுகோளின் பேரில் எதிர்வரும் காலங்களில் மலையக இளைஞர்களுக்கு அதிகமான மலேசிய வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை தான் முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை