1.8 மில்லியன் சிறுவர்களுக்கு தரமற்ற பாடசாலை உணவுகள் வழங்கப்படுவதாக தகவல்!
Oct 15, 2022 74 views Posted By : YarlSri TV
1.8 மில்லியன் சிறுவர்களுக்கு தரமற்ற பாடசாலை உணவுகள் வழங்கப்படுவதாக தகவல்!
ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுகளை உட்கொள்வதாக ஒரு புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலைகள் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக பாடசாலை உணவு வழங்குநர்களின் வர்த்தக அமைப்பான எல்.எ.சி.ஏ. தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக 28 சதவீத பாடசாலை உணவு வழங்குபவர்கள் இப்போது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பயன்படுத்துகின்றனர்.
அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பிரித்தானியரிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிக்கு மாறுவது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.
லண்டனின் மிகவும் பின்தங்கிய பெருநகரங்களில் ஒன்றான நியூஹாமில் உள்ள டெர்சிங்ஹாம் பாடசாலை இலையுதிர்கால அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு புதிய மெனுவைத் தொடங்க உள்ளது.
'இந்த ஆண்டு உணவின் விலை உயர்ந்துள்ளது. சில பொருட்கள் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. ஒவ்வொரு நாளும் பாடசாலை உணவு வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் உணவை வழங்குவதில் இது மிகப்பெரிய சவாலாக உள்ளது' என வழங்குனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!...
-
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது. ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக்ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது. பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார். வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார். இந்நிலையில், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி (வயது-48), தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார். தலைமன்னாரில் நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமானது. சியாமளா கோலி 30 கி.மீ தூரத்தை தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார். இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கொரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது. பாக் ஜலசந்தியை பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான கடலை நீந்தி கடந்த சியாமளா கோலி தெரிவித்தார்!
-
தொழில் அதிபர் மனைவியுடன் உறவு, ரகசிய கர்ப்பம், மேலாடையின்றி காட்சி என வாழ்க்கை ரகசியங்களை வெளியிடவைக்கும் வரம்பு மீறும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago