சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஒரு போலிப்போராட்டம் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!
Sep 26, 2022 62 views Posted By : YarlSri TV
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஒரு போலிப்போராட்டம் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு போலிப்போராட்டம் என வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்கள்.
எமது தொடர்ச்சியான போராட்டம் இன்று 2044வது நாளை எட்டியுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை சிங்களவர்கள் ஒருபோதும் அகற்ற மாட்டார்கள். PTA என்ற பெயரை தேசிய பாதுகாப்பு சட்டம் என்று மாற்றுவது பற்றி ஒரு பேச்சு உள்ளது.
இது சர்வதேச சமூகங்களை குறிப்பாக ஐரோப்பிய ஒ.ன்றியம் மற்றும் அமெரிக்காவை ஏமாற்றும் செயற்பாடே,சுமந்திரன் யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு ஆதரவாக இருந்தமை ஒரு விசித்திரமான நடத்தையாகும்.
அவர் தனது கற்பனைதமிழ் எதிரிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தினார். அவர் ஒரு சூழ்ச்சிப் பொய்யர் மற்றும் தமிழரை ஏமாற்றுபவர் என்பதை நாம் நிரூபிக்க முடியும்.
சர்வதேச விசாரணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டதாக கூறிய அவர் இப்போது சர்வதேச விசாரணைக்கு ஐ.சி.சி. அழைப்பு விடுக்கும் என்று கூறுவதன் மூலம் அவர் ஒரு பெரிய பொய்யர் என்பதை காட்டுகிறார்.
போருக்குப் பின்னர் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட காலத்தில் திரு.சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி 25 தமிழர்களைக் கைது செய்தார். 30 தொடக்கம் 40 வரையிலான சிங்கள விசேட அதிரடிப்படையினரை தமிழ் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாக்க சுமந்திரன் பயன்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவர் எப்போதும் தமிழ் தேசியத்தை எதிர்க்கும் மக்களுக்கு உதவுகிறார். இதனால்தான் அவர் கேகேஎஸ்லிருந்து அம்பாந்தோட்டை வரை கையொப்பங்களை சேகரிப்பதற்காக ஒரு பெரிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். தனது அரசியலுக்காகவும்இ கொழும்பில் ஒரு தமிழனாக தனது பாதுகாப்பான வாழ்வுக்காகவும் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் அவர் திருப்திப்படுத்துகிறார்.
சிங்களக் கொடூரச் சட்டத்திலிருந்து எம்மை விடுவிப்பதற்கும் எமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கும் இன்னும் பல தேவைகளுக்கும் தமிழ் இறையாண்மை வேண்டும்.தமிழர்களுக்கு உதவ முன் வாருங்கள் என்று ஒவ்வொரு தமிழனும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அழைக்க வேண்டும்.' என்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago