Skip to main content

அரச நிறுவனங்களை மக்கள் பிரதிநிதி இல்லாமல் கொண்டு செல்வது குற்றமாகும்-மஹிந்த தேசப்பிரிய!

Sep 25, 2022 71 views Posted By : YarlSri TV
Image

அரச நிறுவனங்களை மக்கள் பிரதிநிதி இல்லாமல் கொண்டு செல்வது குற்றமாகும்-மஹிந்த தேசப்பிரிய! 

பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது முழுவதும் சட்டவிரோத செயலாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.



ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



மேலும் மாகாண சபை முறைமை கொண்டு செல்ல வேண்டுமாயின் பழைய முறையில் அல்லது புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



இதேவேளை எந்தவொரு அரச நிறுவனத்தையும் மக்கள் பிரதிநிதி ஒருவர் இல்லாமல் கொண்டு செல்வது குற்றமாகும் என்பதோடு இது பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறும் செயல் எனவும் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை