Skip to main content

5ஆவது நாளாகவும் காலிமுகத்திடலில் மக்கள் அலை; தொடர்கின்றது போராட்டம்!

Apr 13, 2022 85 views Posted By : YarlSri TV
Image

5ஆவது நாளாகவும் காலிமுகத்திடலில் மக்கள் அலை; தொடர்கின்றது போராட்டம்! 

எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் திகதி காலை முதல் கொழும்பு – காலிமுகத்திடலில் ஒன்றுகூடிய மக்கள் இன்று 5வது நாளாகவும் கோட்டாபய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இடைக்கிடையே மழை பெய்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.



இதனிடையே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பலர் தாமாக முன்வந்து உணவு, குடிதண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.



இதேவேளை, கோட்டாபய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை