தனுஷ் - செல்வராகவன் கூட்டணியின் நானே வருவேன்!
Apr 11, 2022 71 views Posted By : YarlSri TV
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியின் நானே வருவேன்!
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
செல்வராகவன்- தனுஷ் கூட்டணிக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. தற்போது மீண்டும் இருவரும் 'நானே வருவேன்' படத்திற்காக இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். யோகிபாபு, இந்துஜா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நடிகை எல்லிஅவர்ராம் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்தது. செல்வராகவன் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனுஷ் இதைத் தெரிவித்துள்ளார்.
விரைவில் படத்திலிருந்து பல சுவாரசியமான அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago