இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் காலமானார்
Apr 04, 2022 88 views Posted By : YarlSri TV
இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் காலமானார்
இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தமது 78வது வயதில் காலமானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு அவர் காலி - பலப்பிட்டிய என்ற இடத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோதே மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவரின் உடலம் தற்போது பலப்பிட்டிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
1944 டிசம்பர் மாதம் பிறந்த பேராசிரியர் சந்திரசேகரம், இலங்கையின் தமிழ் கல்வி வரலாற்றில் பாரிய பங்களிப்புக்களை செய்தவராவார். பதுளையை பிறப்பிடமாகக்கொண்ட பேராசிரியர் சோ. சந்திரசேகரம், கல்வியியல் துறையில் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஹிரோசிமா பல்கலைக்கழக முதுமானி பட்டதாரியாவார்.
கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் பீடாதிபதியாகவும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவராகவும் மற்றும் கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பணியாற்றினார்.
பேராசிரியர் சோ.சந்திரசேகரம், தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளில் புலமை கொண்டவர் என்பதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
மேலும் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கொள்கையை முதன் முதலில் முன்மொழிந்தவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம், ஆவார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago