Skip to main content

ஆயுதங்களுடன் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Jun 01, 2022 62 views Posted By : YarlSri TV
Image

ஆயுதங்களுடன் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த பொலிசார்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் 

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆயுதங்களுடன் பொலிசார் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



ஞாயிற்றுக்கிழமை இரவு, Champel என்ற இடத்திலுள்ள தனியார் குடியிருப்பு ஒன்றிற்குள் கைகளில் ஆயுதங்களுடன், திபுதிபுவென பொலிசார் நுழைந்தார்கள்.



அந்த வீட்டில் பலத்த வாக்குவாதம் நடப்பது குறித்து தங்களுக்கு புகார் வந்த நிலையில், அங்கு கூர்மையான ஆயுதம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்ததால் அப்படி அதிரடியாக வீட்டுக்குள் நுழைய நேர்ந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.



அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், உதவிக்காக அவர் கட்டிடத்தின் வெளியே வந்து காத்திருந்திருக்கிறார்.



பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை