அமெரிக்காவில் நடுக்கடலில் இந்தியருக்கு நேர்ந்த சோகம்
Jun 01, 2022 66 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் நடுக்கடலில் இந்தியருக்கு நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்களுடன் நீரில் குதித்த இந்திய வாலிபர் அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் இந்தியா- தெலுங்கானாவின் ராஜண்ணா-சர்கில்லா மாவட்டத்தின் வெமுலவாடா பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் குமார் (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஐதராபாத்தில் பி.டெக் படித்த பின்பு, கடந்த டிசம்பரில் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவின் மேற்கு புளோரிடாவுக்கு சென்றுள்ளார்.
கடந்த ஞாயிற்று கிழமை பொழுதுபோக்க தனது நண்பர்களான சுபஉதய், மைசூரா, சரண், ஸ்ரீகர் மற்றும் சார்வரி ஆகியோருடன் வாடகைக்கு படகு ஒன்றை எடுத்து கொண்டு மேற்கு புளோரிடாவின் கிராப் தீவுக்கு சென்றுள்ளார்.
இதன்போது வழியில் படகு திடீரென நின்று விட்டது. இதனால், நண்பர்களுடன் சேர்ந்து படகை சரி செய்ய நடுக்கடலில் குதித்துள்ளார். ஆனால், கடலில் நீரோட்டம் வலிமையாக இருந்துள்ளது.
அந்த வழியே வந்த ஒக்கலூசா கவுன்டி ஷெரீப் அலுவலக படகு ஒன்று தேடுதல் பணியில் 4 நண்பர்களை மீட்டு உள்ளது. ஆனால் கடலில் அலைகள் பெரிய அளவில் எழுந்து வந்ததில் யஷ்வந்த் படகிற்கு வர முடியவில்லை.
இதில் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, கடலோர காவல் படையினர் பல மணிநேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டதில், காணாமல் போன யஷ்வந்தின் உயிரற்ற உடல் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago