ஒற்றை ஆளாக ரஷ்யப்படையினரை எதிர்த்து போராடும் உக்ரைன் வீரர்
May 31, 2022 66 views Posted By : YarlSri TV
ஒற்றை ஆளாக ரஷ்யப்படையினரை எதிர்த்து போராடும் உக்ரைன் வீரர்
முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிகளுக்குள் இருந்தவாறு அந்த வீரருக்கும் ரஷ்யப்படையினருக்கும் நடக்கும் போர், ட்ரோன் ஒன்றின் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனிலுள்ள Luhansk பகுதியில் அமைந்துள்ள Novotoshkivske என்ற இடத்தில், வானிலிருந்து ட்ரோன் கமெரா ஒன்று இந்தக் காட்சியைப் படம் பிடித்துள்ளது.
பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்து போரிடும் உக்ரைன் வீரர்களில் ஒருவரை ரஷ்யப்படையினர் சுட்டுக் கொன்றுவிட, மற்றவர்கள் பின்வாங்கவேண்டிய ஒரு சூழல். அப்போது தன் சக வீரர்கள் தப்பிச் செல்வதற்கு வசதியாக ஒரு வீரர் மட்டும் தனித்து நின்று அந்த ரஷ்யப் படையினருடன் போராடுவதை அந்த காட்சிகளில் காணலாம்.
அவர் துப்பாக்கியால் சுட, முதலில் பின்வாங்கும் ரஷ்யப்படையினர், பிறகு தப்ப வழியில்லாத ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டுள்ள அந்த ஒற்றை வீரரை சரமாரியாகத் தாக்குகிறார்கள்,
அவரை நேரடியாக எதிர்த்துத் தாக்க இயலாத அந்த ரஷ்யப்படையினர், துப்பாக்கியால் சுடுவதை விட்டுவிட்டு, கையெறிகுண்டுகளை அவர் இருக்கும் இடத்தை நோக்கி வீசுகிறார்கள்.
அப்படி அவர்கள் வீசிய கையெறி குண்டு ஒன்று அந்த உக்ரைன் வீரர் இருக்கும் இடத்தில் விழ, திரைப்படங்களில் காட்டப்படுவதைபோல், அந்த கையெறி குண்டை எடுத்து திருப்பி ரஷ்யப்படையினர் மீதே வீசுகிறார் அவர்.
மீண்டும் அவர்கள் அந்த உக்ரைன் வீரர் மீது கையெறி குண்டு ஒன்றை வீச, அந்த குண்டு வெடித்து, அவரது கால்களை முடமாக்கிவிடுகிறது.
கால்களில் கடுமையான காயம் பட்டும், ரஷ்யப்படையினர் வீசும் மற்றொரு கையெறி குண்டையும் எடுத்து அவர்கள் மீதே வீசுகிறார் அவர்.
ஆனால், மீண்டும் ரஷ்யப்படையினர் தாக்க, அந்தப் பகுதியிலிருந்து கரும்புகை எழுகிறது.
புகை அடங்கியபின் பார்த்தால், அந்த உக்ரைன் வீரர் அசைவின்றிக் கிடக்கிறார்!
அவர் உயிரிழந்துவிட்டாலும், ஒற்றை ஆளாக நின்று ரஷ்யப்படையினரை எதிர்த்து அவர் வீரமரணம் அடைந்ததை நிச்சயம் வரலாறு நினைவுகூரும் என்பதில் சந்தேகமில்லை...
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago