சரணடைந்த உக்ரைன் இராணுவத்தை எங்கே அனுப்புகிறது ரஷ்யா
May 20, 2022 66 views Posted By : YarlSri TV
சரணடைந்த உக்ரைன் இராணுவத்தை எங்கே அனுப்புகிறது ரஷ்யா
மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணுவத்திடம் சரணடந்த உக்ரைனிய இராணுவ வீரர்களில் 900 பேரை ரஷ்யாவின் சிறைக் கொலனிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்ய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரும்பு ஆலையில் இருந்து வெளியேறி ரஷ்ய இராணுவத்திடம் சரணடைந்த 959 உக்ரைனிய இராணுவ வீரர்களில் 51 பேர் அவர்களது படுகாயம் காரணமாக மருத்துவமனைக்கும், மீதமுள்ள 908 உக்ரைனிய இராணுவ வீரர்கள் ரஷ்ய இராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கும் ஒலெனிவ்கா( Olenivka) நகரின் சிறைக் கொலனிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிறைக் கொலனிகளுக்கு அனுப்பட்டுள்ள உக்ரைனிய இராணுவ வீரர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுவார்களாக அல்லது போர்க் கைதிகளாக நடத்தப்படுவார்களாக என்ற தெளிவான விளக்கத்தை ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago