மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!
May 14, 2022 95 views Posted By : YarlSri TV
மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!
கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவிற்கும் அழைத்துச்செல்லப்பட்ட 38 இலங்கையர்களை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்புவதற்கான மனித கடத்தல் முயற்சி தொடர்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தாக்கல் செய்த முன்பிணை மனுவை இந்தியாவின் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபரான, தமிழ்நாடு- ராமநாதபுரத்தை சேர்ந்த சீனி அபுல்கான், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தலைமறைவாகியுள்ளார்.
இந்தநிலையில் அபுல்கான், தமக்கு நிவாரணம் கோரி முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
தமது கட்சிக்காரர், அகதிகள் என்று நம்பியே இலங்கையர்களை வரவழைத்ததாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக இலங்கை அகதிகள் இந்தியாவிற்கு வருவது தற்போது சர்வசாதாரணமாக உள்ளது.
மேலும் அங்கிருந்து அகதிகளை ஏற்று அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதில் இந்திய அரசாங்கம் தாராளமாக உள்ளது என்றும் சட்டத்தரணி வாதிட்டார்.
எனினும்,அபுல்கான், பல்வேறு குற்றங்களை செய்துள்ளார். மங்களூருவில் இருந்த இலங்கையர்கள்; தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் சிறந்த எதிர்கால வாய்ப்புகளுக்காக கனடாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளார் என்று அரச தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.
மனுதாரராக அபுல்கான் தலைமறைவாகி, ஆரம்பத்திலிருந்தே விசாரணையின் செயல்முறையைத் தவிர்க்கிறார் என்றும் அரச தரப்பு மன்றில் சுட்டிக்காட்டியது.
இதனையடுத்து நீதிபதி கசனப்ப நாயக் முன்பிணை மனுவை நிராகரித்தார் மனுதாரர் குற்றத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார் என்பதையும், அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago