Skip to main content

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி காலி முகத்திடலில் போராட்டம்

May 03, 2022 66 views Posted By : YarlSri TV
Image

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி காலி முகத்திடலில் போராட்டம் 

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய பதாகை காட்சிக்காக  வைக்கப்படுகின்றது. 



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள்  ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 



இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக் களத்தில் இலங்கையில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன. 



எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பதாதைகள் அகற்றப்பட்டிருந்தன. 



இறந்த ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இவ்வாறான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.  அவை அகற்றப்பட்ட பின்னர் இன்று மீண்டும் அந்த பதாதைகளை அங்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 



 



இந்த நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில்  படுகொலை செய்யப்பட்ட  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் புகைப்படத்தை தாங்கிய பதாதையும் அங்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.  



Gallery


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை