Skip to main content

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பெண் பொறியியலாளர் பலி

Apr 30, 2022 53 views Posted By : YarlSri TV
Image

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பெண் பொறியியலாளர் பலி 

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கையை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



உயிரிழந்தவர் கம்பஹா, யக்கல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், குறித்த பெண் தற்போது அவுஸ்திரேலியாவின் கான்பராவில் வசித்து வருவதாகவும், அவரது கணவரும் அவுஸ்திரேலியாவில் பொறியாளராக பணிபுரிவதாகவும் கூறப்படுகின்றது.





இந்நிலையில் குறித்த பெண் தனது கணவர் உட்பட மற்றொரு குழுவுடன் கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது இந்த அனர்த்தத்திற்கு இடம்பெற்றுள்ளது.



கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அவுஸ்திரேலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

17 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

17 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை