Skip to main content

வெளிநாட்டிலுள்ள இலங்கையரின் பெருமளவு பணம் கற்பாறைக்குள் கண்டுபிடிப்பு!.

Feb 23, 2022 107 views Posted By : YarlSri TV
Image

வெளிநாட்டிலுள்ள இலங்கையரின் பெருமளவு பணம் கற்பாறைக்குள் கண்டுபிடிப்பு!. 

பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாறை ஒன்றின் கீழ் இருந்து 80 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளள்னர்..



பாணந்துறை குற்ற விசாரணை பிரிவினரால் இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



வெளிநாட்டில் மறைந்திருந்து பாரியளவு போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பாணந்துறை சலிது என்பவருக்கு சொந்தமானதென கூறப்படும் பணமே இவ்வாறு கண்டுபிடிக்ககப்பட்டுள்ளதென குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



சலிதுவின் போதை பொருள் வர்த்தகத்திற்கு உதவும் பிரதான உதவியாளர் பணம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



பாணந்துறை குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய, அந்த நபரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு அருகில் குருப்புமுல்ல விகாரையின் கற்பாறையின் கீழ் பாரிய அளவு பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை