திமுக கனவை சிதைத்த அந்த ஒரு வாக்கு … ஊத்தங்கரையில் நடந்தது என்ன?
Feb 23, 2022 69 views Posted By : YarlSri TV
திமுக கனவை சிதைத்த அந்த ஒரு வாக்கு … ஊத்தங்கரையில் நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கல்பனா காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, மற்றும் காவேரிப்பட்டணம், பர்கூர், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய 6 பேருராட்சிகள் உட்பட 8 நகர்ப்புற அமைப்புகளுதேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர், வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.க்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலை வகித்தது. ஒசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சியை திமுக கைப்பற்றி அசத்தியுள்ளது. குறிப்பாக ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயர் எந்த கட்சியை சார்ந்தவர் என்ற கேள்விக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதேநேரத்தில், ஊத்தங்கரையில் திமுகவின் கனவை அதிமுக வேட்பாளர் கல்பனா சிதைத்துள்ளார். காரணம், ஊத்தங்கரை பேரூராட்சி 8-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கல்பனா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் மலர்விழியை விட கூடுதலாக ஒரு வாக்குகள் மட்டும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கல்பனா 273 வாக்குகளும், மலர்விழி 272 வாக்குகளும் பெற்றனர்.ஊத்தங்கரை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களே முன்னிலை வகித்த நிலையில் அதிமுகாவை வாஷ் அவுட் செய்யும் கனவோடு இருந்த திமுகவுக்கு அங்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
சுற்றி வளைத்த சுயேச்சைகள்... திமுக, அதிமுகவை அதிர வைத்த ஆரணி தேர்தல் முடிவு!
அதேபோல், 11வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமேகலை சுயேச்சை வேட்பாளரை காட்டிலும் ஒரே வாக்குகள் அதிமுக பெற்று பெற்றி பெற்றுள்ளானர். 3-வது வார்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் துரை ஒரே ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago