மிகப் பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் 1,100 சொகுசு கார்கள் தீயில் கருகின
Feb 19, 2022 84 views Posted By : YarlSri TV
மிகப் பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் 1,100 சொகுசு கார்கள் தீயில் கருகின
ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவிலுள்ள டேவிஸ்வில்லி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த பெலிசிட்டி ஏஸ் என்ற மிகப் பெரிய சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் 1,100 சொகுசு கார்கள் தீயில் கருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பல் ஜேர்மன் துறைமுகத்திலிருந்து கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி 22 மாலுமிகளுடன் அமெரிக்காவின் ரோடே தீவிலுள்ள டேவிஸ்வில்லி துறைமுகம் நோக்கி பயணித்துள்ளது.
இந்நிலையில் அட்லாண்டிக் கடல் பகுதியில் அசோர்ஸ் தீவு அருகே நேற்று சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்துள்ளது.
அந்த கப்பலில் வோல்ஸ்வோகன், லம்போகிரினி, போர்ஷே, ஆடி உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு ரக கார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கப்பலில் ஏற்பட்ட தீயினால் 1,100இற்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் தீயில் கருகியுள்ளன. இந்த தகவலை அறிந்த மீட்புப் படையினர் அதிலிருந்த 22 மாலுமிகளைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இருப்பினும் கப்பல் தொடர்ந்து தீப்பிடித்த வண்ணமுள்ளதாகவும், மேலும் சொகுசு ரக கார்கள் தீயில் எரியும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago