Skip to main content

ஜெனீவாவில் இலங்கைக்கு அதிகரிக்கும் நெருக்கடி நிலை..

Feb 19, 2022 70 views Posted By : YarlSri TV
Image

ஜெனீவாவில் இலங்கைக்கு அதிகரிக்கும் நெருக்கடி நிலை.. 

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இடம்பெறும்   சம்பவங்கள், இலங்கை தொடர்பாக நிலைப்பாடு எடுக்கும்போது பாரதூரமானதாக அமையக் கூடும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்  தயாசிறி ஜயசேகர  தெரிவித்துள்ளார்.  



ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பேசக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஊடகவியலாளர் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.



இவ்வாறான சம்பவங்கள் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீது பாரதூரமான நிலைப்பாடுகள் தோன்ற ஏதுவாக அமையும்.  உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு, ஊடகவியலாளர் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இது மிகவும் மோசமான செயற்பாடு  எனவும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை