இராணுவ வீரர்களுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம் - இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு...
Feb 16, 2022 93 views Posted By : YarlSri TV
இராணுவ வீரர்களுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம் - இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு...
சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் வீட்டுக் கனவை நனவாக்கும் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 'விரு அபிமான' வீட்டுக் கடன் திட்டத்தை தாம் அறிமுகப்படுத்தியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின்(Shavendra Silva) கருத்துப்படி, இராணுவத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஓய்வூதியக் கனவை நனவாக்குவதுடன், சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமைந்துள்ளது.
இங்கு புதிய வீடு கட்ட, வீடு பழுது பார்க்க, வீடு வாங்க, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இராணுவத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய பதவிகளுக்கும் 'விரு அபிமான' வீடமைப்புக் கடன் திட்டத்தின் மூலம் 03 மில்லியன் ரூபா தொடக்கம் 15 மில்லியன் ரூபா வரையிலான கடனுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
கடன் சலுகை நிலையான வருடாந்திர வட்டி விகிதத்தில் கிடைக்கும் மற்றும் ஓய்வூதியத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 70 வயது வரை திருப்பிச் செலுத்தலாம். மேலும், சிறிலங்கா இராணுவ பொறியியல் சேவைகள் படைப்பிரிவினால் அங்கீகரிக்கப்பட்ட 05 வீட்டுத் திட்டங்களின் கீழ் பொறியியல் சேவைகள் படைப்பிரிவினால் வீடு ஒன்றை நிர்மாணிக்க முடியும்.
மற்றும் இந்தக் கடன் வசதியைப் பெறும் எவரும் இதற்காக தமது படைப்பிரிவில் இருந்து பணிக்குழுக்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. சிறிலங்கா இராணுவ நலன்புரிச் சபையின் சிபாரிசுக்கு அமைய, மக்கள் வங்கி உரிய கடனை வழங்கவுள்ளதுடன், விரு அபிமான வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் எந்தவொரு மக்கள் வங்கியிலும் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago