Skip to main content

கொழும்பு புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினருக்கும் நபருக்கும் இடையில் மோதல் - ஒருவர் சுட்டுக்கொலை.

Feb 11, 2022 83 views Posted By : YarlSri TV
Image

கொழும்பு புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினருக்கும் நபருக்கும் இடையில் மோதல் - ஒருவர் சுட்டுக்கொலை. 

கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினருக்கும் நபர் ஒருவருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.



மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



உயிரிழந்த நபர் பாதாள உலகக்குழு உறுப்பினர் எனவும், 26 வயதான 'அப்bபா' (Abba) என்றழைக்கப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



டுபாயில் உள்ள 'பாணந்துற சாலிந்த' என்ற நபருக்கு நெருக்கமான ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.



இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை