Skip to main content

மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம்:கோட்டாபயவிடம் இதனை எதிர்பார்க்கவில்லை

Mar 17, 2022 81 views Posted By : YarlSri TV
Image

மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம்:கோட்டாபயவிடம் இதனை எதிர்பார்க்கவில்லை 

நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் இப்படியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போது நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதியிடம் இப்படியான ஆட்சி நிர்வாகத்தை எதிர்பார்த்து இருக்கவில்லை எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.



கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். “ரயில்வே, மருத்துவமனைகளில் பணிப்புறக்கணிப்புகளை செய்ய இடமளிக்க முடியாது.



இவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காகவே மக்கள் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் வழங்கினர். இங்கு ஆர்ப்பாட்டம், அங்கு எதிர்ப்பு நடவடிக்கை என்ன இது.



கோட்டாபய ராஜபக்சவிடம் இப்படியான ஆட்சி நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி கொள்கின்றனர்.



அத்தியவசியமான பயணங்களை மேற்கொள்ளும் போது வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது.



அந்த பலத்தை பயன்படுத்தாமல் இருப்பதால், என்ன பிரயோசனம். மக்கள் பிக்குகளையும் திட்டுகின்றனர். இரசாயன பசளை எதிர்பார்த்து இருந்தோம் என்றால், எரிபொருள், எரிவாயு போன்று இரசாயன பசளை கப்பலில் வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும்.



முன் கூட்டியே நாம் சேதனப் பசளை பயிர் செய்கைக்கு சென்றுள்ளோம். குறைப்பாடுகளுடன் கூட அதனை செய்ய முடிந்தால், நல்லது. மக்கள் மத்தியில் சென்று சரியாக புரியவைக்க கூடிய எவரும் இல்லை. நாடு எந்த நிலைமையில் இருக்கின்றது என்பதை சரியாக கூறுங்கள்” எனவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை