நாம் தோற்றுவிட்டோம்... போரை நிறுத்துங்கள்: கதறும் ரஷ்ய வீரர்கள்
Mar 15, 2022 82 views Posted By : YarlSri TV
நாம் தோற்றுவிட்டோம்... போரை நிறுத்துங்கள்: கதறும் ரஷ்ய வீரர்கள்
உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் போரை நிறுத்த வலியுறுத்தி ஜனாதிபதி புடினிடம் கெஞ்சியுள்ளார். உக்ரைன் படையெடுப்பில் ஏற்கனவே நாம் தோற்றுவிட்டோம் என குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் உயிர்ப்பலி வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஞாயிறன்று உக்ரைன் துருப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார் Lieutenant Colonel Maxim Krishtop. ஆனால், உக்ரைன் மீதான புடினின் கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு Krishtop மன்னிப்புக் கோரியதுடன், உக்ரைன் மக்கள் மீது குண்டு வீசியது வாழ்க்கையில் தாம் செய்த மிகப்பெரிய குற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.
கீவ் நகரை கைப்பற்றும் திட்டத்தை கைவிட்டு, போரை நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கீவ் போன்றதொரு மிகப்பெரிய நகரை கைப்பற்றுவது என்பது இரு தரப்புக்கும் பேரிழப்பை ஏற்படுத்தும் எனவும், ஒரு கலாச்சாரத்தை அழித்தொழிக்க வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை புடின் கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ள Krishtop, போரை நிறுத்துக, பொதுமக்களை கொல்வதையும் நிறுத்துங்கள், ஏற்கனவே நாம் போரில் தோற்றுவிட்டோம் என்பது உங்களுக்கே தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்தே, அந்த நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் பணிகளை ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டு முன்னெடுத்து வந்துள்ளது.
இதனிடையே, கிழக்கு நகரமான மைக்கோவைல் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் புடினின் படைகள் தற்போது மேற்கில் ஒடெசாவை நோக்கிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago