நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ளுங்கள்
Mar 15, 2022 49 views Posted By : YarlSri TV
நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ளுங்கள்
இன்று பெரும்பாலான சிறுவர்கள், பெரியவர்கள் நகம் கடிப்பதை பழககமாக வைத்துள்ளனர். இதனை மருத்துவத்தில் ஓனிகோபாகியா என்று அழைக்கப்படுகிறது.
எதனால் நகம் நடிக்கிறோம்?
மருத்துவர்களின் தகவல்படி, யாருக்கேனும் தேவையற்ற எண்ணங்கள், யோசனைகள் அல்லது உணர்வுகள் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும் இதன் காரணமாக கூட சிலர் நகம் கடிக்கலாம்.
அடிக்கடி நகம் கடிப்பது என்பது பயத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நகங்களை மெல்லும் செயல் மன அழுத்தம், பதற்றம் இவற்றை நீக்குகிறது.
வழக்கமாக நகங்களைக் கடிப்பவர்கள் பதட்டமாகவோ, தனிமையாகவோ அல்லது பசியாகவோ உணரும் நேரத்தில் தான் இவ்வாறு அடிக்கடி நகம் கண்டிக்கின்றனர்.
விளைவுகள் என்ன?
மேலும் நகம் கடிப்பதன் மூலம் நகத்தை சுற்றி இருக்கும் திசுக்களில் உள்ள தொற்று, ஆணி துகள்கள் மற்றும் அழுக்குகள் வயிற்றுக்குள் செல்வதால் உடலுக்கு தீங்கு ஏற்படும்.
பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்றவை அதிகரித்து உடலில் நோய்த்தொற்று ஏற்படுவதுடன் நகங்களை சேதப்படுத்துவதுடன் க்யூட்டிகல் மற்றும் சுற்றியுள்ள தோலையும் சேதப்படுத்துகிறது.
நகங்களைக் கடிப்பதால் நகங்களைச் சுற்றி இரத்தப்போக்கு, வீக்கம், வலி, தோல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது பற்கள், ஈறுகளில் உள்ள திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தும்.
இந்த பழக்கத்திலிருந்து விடுபட, நகங்களில் கசப்பான நெயில் பாலிஷை பூசலாம், நகங்களை வெட்டி குட்டையாக வைத்திருப்பது அல்லது கசப்பான எண்ணெயை நகங்களில் தடவுவது போன்றவற்றை செய்யலாம்.
மேலும் இரவில் இரவில் அல்லது நீங்கள் தனியாக இருக்கும்போது கைகளில் கையுறைகளை அணியலாம், இதனால் நீங்கள் நகம் கடிப்பது தடைபடும்.
நகங்களை மெல்லுவதற்குப் பதிலாக, சூயிங் கம் அல்லது பெருஞ்சீரகத்தை மெல்லலாம். மேலும் இந்த ஓனிகோபேஜியாவிற்கு பல சிகிச்சைகள் உள்ள நிலையில், இதிலிருந்து நிரந்தரமாக குணமடைய மருத்துவரிடம் செல்வது நல்லது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago