எல்லையில் பதற்றம்! தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறை.. தமிழக விவசாயிகள் போராட்டம்
Mar 13, 2022 90 views Posted By : YarlSri TV
எல்லையில் பதற்றம்! தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறை.. தமிழக விவசாயிகள் போராட்டம்
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற்றிச் சென்ற தமிழக அதிகாரிகள் கேரளாவுக்குள் வர அம்மாநில வனத்துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை தேக்கடி புலிகள் காப்பக வளாகத்திற்குள் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளைக் கட்டுமான பொருட்களைக் குமிளி வழியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்றிச் சென்றனர்.அங்குள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை, உதவிப் பொறியாளர் அலுவலக பணிகளுக்காக இந்தப் பொருட்களை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இருப்பினும், தமிழக அதிகாரிகள் கொண்டு சென்ற பொருட்களுக்குக் கேரள வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. அனுமதி கடிதம் இல்லை எனக் கூறி பெரியார் புலிகள் காப்பக நுழைவாயிலில் தமிழக அதிகாரிகளைக் கேரள வனத்துறை தடுத்து நிறுத்தி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், இது தொடர்பாகத் தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருக்குத் தெரியப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாகத் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கேரள வனத்துறையின் இந்த நடவடிக்கை அதிருப்தி அடைந்த தமிழக விவசாயிகள் குமிளியில் போராட்டம் நடத்தச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறை அதிகாரிகள், லோயர் கேம்பில் பகுதியில் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து லோயர் கேம்ப் பகுதியிலேயே போராட்டம் நடத்திய விவசாயச் சங்க பிரதிநிதிகள் மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொறுப்பாளர்கள் கேரள வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டக்காரர்களைக் கைது செய்து கூடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே முழுமையான போர் மூண்டுள்ளது. இந்த சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது!
-
புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்!
-
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இம்ரான்கான் சந்தித்து பேசினார். வர்த்தகம், சுற்றுலா குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago