Skip to main content

நாட்டுக்கே தலைவர் ஆனாலும் தாய்க்கு செல்லப்பிள்ளை; நீண்ட இடைவெளிக்கு பின் தாயை சந்தித்த மோடி!

Mar 12, 2022 77 views Posted By : YarlSri TV
Image

நாட்டுக்கே தலைவர் ஆனாலும் தாய்க்கு செல்லப்பிள்ளை; நீண்ட இடைவெளிக்கு பின் தாயை சந்தித்த மோடி! 

இரண்டு வருட நீண்ட  இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாரிடம் ஆசி பெற்று காந்திநகரில் அவருடன் இரவு உணவு அருந்தினார்.



கொரோனா பெரும் தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பிரதர் மோடி தனது தாயை சந்தித்தார். மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் ஹிராபென் வசித்து வருகிறார்.



இந்நிலையில் காந்திநகர் புறநகரில் உள்ள ரெய்சன் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். குஜராத்தில் தனது வேலைகளை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் பிரதமர் மோடி தாயை சந்தித்தார்.



இதன்போது தனது தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்கிய பிரதமர், அவருடன் இணைந்து இரவு உணவு உண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.    Gallery



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை