உலக சாதனை படைத்த ஒன்றரை வயது இலங்கை குழந்தை! கவலை வெளியிட்ட பெற்றோர்
Mar 12, 2022 93 views Posted By : YarlSri TV
உலக சாதனை படைத்த ஒன்றரை வயது இலங்கை குழந்தை! கவலை வெளியிட்ட பெற்றோர்
அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்றரை வயதான பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளார்.
ஐரின் என்ற குழந்தையே 7 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை அடையாளம் கண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
மேலும் இந்த குழந்தை 2020 ஆம் ஆண்டு மே 8 ஆம் திகதி அன்று பிறந்துள்ளது.
ஆசிய சாதனை புத்தகத்திலும் இந்த குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. பூக்கள், விலங்குகள், வாகனங்களை வடிவமைப்பது போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களை அவர் குறுகிய நேரத்துக்குள் அடையாளம் கண்டுள்ளார்.
மேலும் அந்த குழந்தையால் 25க்கும் மேற்பட்ட இலங்கைத் தலைவர்களை அடையாளம் கண்டுள்ளார். இலங்கையின் அரசியல் தலைவர்கள் உட்பட பல தலைவர்களின் புகைப்படங்களை சரியாக அடையாளம் காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.
குழந்தைக்கு ஒரு வயதாகும் போது பெற்றோர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்களை குழந்தைக்கு காண்பித்து அவற்றை அடையாளம் காணும் வகையில் பயிற்சிகளை பெற்றோர் அன்பாக வழங்கியுள்ளனர்.
காலையில் எழும்பும் போதே குறித்த குழந்தை இந்த புகைப்படங்களை இனம் காண்பதற்கு ஆர்வமாக உள்ளதை அறிந்து கொண்டனர்.பின்னர் மன்னர்கள், உலகத்தலைவர்களின் படங்களை இனம் காண்பதற்கு குழந்தையிடம் பெற்றோர் மென்மையான பயிற்சிகளை வழங்கி குழந்தை இப்போது பல்வேறு திறமைகளுடன் மிளிர்கிறது. 30க்கும் மேற்பட்ட பாடல்களை குறித்த குழந்தை மனப் பாடம் செய்து ஒப்புவிக்கும் அதீத திறமையும் கொண்டுள்ளது.
எனது அம்மா எம்மை கஷ்டப்பட்டு வளர்த்தார். நாங்கள் நான்கு சகோதரங்கள். ஆகவே எனது பிள்ளை திறமையாக வர வேண்டும் என்று நான் நினைத்து குழந்தையுடன் அன்பாகவும், அறிவாகவும், விளையாட்டாகவும் பேசி அவரின் திறமைகளை தற்போது வளர்த்து வருகிறேன்.
இதுவரை எனது குழந்தையின் திறமையை எந்த தலைவர்களும் பாராட்ட வரவில்லை, அங்கீகாரமும் வழங்கவில்லை என குழந்தையின் தாய் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago