Skip to main content

இலங்கையில் அனைத்துத் துறைகளிலும் வரவிருக்கும் பேராபத்து!

Mar 09, 2022 74 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் அனைத்துத் துறைகளிலும் வரவிருக்கும் பேராபத்து! 

நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட்டுப்பாடு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஆகியவற்றால் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் மிக விரைவில் பெரும் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக 12 பிரதான தனியார்துறைகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.



நாளை மோசமான விளைவை எதிர்கொள்வதைவிட இன்றே பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்வது சிறந்ததென அந்தக் கூட்டமைப்பு அரசுக்கு நிலைமையை விபரித்துள்ளது.



கூட்டமைப்பு, ஆடை உற்பத்தியாளர்கள், இளம் தொழில்முனைவோர் சம்மேளனம், சர்வதேச வர்த்தக சம்மேளனம், இலங்கை ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம், நிர்மாணத்துறை சம்மேளனம் உள்ளிட்ட பன்னிரண்டு அமைப்புகள் இது தொடர்பில் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன.



இதேவேளை, நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமையிலிருந்து மீள்வதற்கு தேவையான உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.



நிர்மாணத்துறைக்கு உரிய மூலப்பொருட்களை இறக்குமதிசெய்ய முடியாததன் காரணமாக அந்தத் துறையிலிருந்த 50 ஆயிரம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக நிர்மாணத்துறை சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஸ்ஸங்க என். விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



இதேவேளை, அந்நிய செலாவணி இருப்பு குறைவடைகின்றமை மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆறு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் இந்தக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை