மன்கட்” விதிமுறையில் மாற்றம்.. கிரிக்கெட்டின் முக்கிய முறைகள் மாற்றம்.. அஸ்வினுக்கு கிடைத்த வெற்றி!
Mar 09, 2022 85 views Posted By : YarlSri TV
மன்கட்” விதிமுறையில் மாற்றம்.. கிரிக்கெட்டின் முக்கிய முறைகள் மாற்றம்.. அஸ்வினுக்கு கிடைத்த வெற்றி!
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூர்வமாக்குவது உள்ளிட்ட பல விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவது, புதிய விதிமுறை உருவாக்குவது போன்ற கமிட்டியாக எம்சிசி உள்ளது.
இனி விக்கெட்டுகள் மூலமாக எந்தவொரு சர்ச்சைகளும் ஏற்படாமல் இருப்பதை தடுக்க புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.அதாவது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லரை - அஸ்வின் மன்கட் என்ற முறையில் அவுட்டாக்கினார். இது விளையாட்டு முறைகளுக்கு எதிரானது எனக்கூறி அஸ்வின் மீது பல விமர்சனங்கள் குவிந்தன. நான் ஸ்டரைக்கர் எண்டில் உள்ள பேட்ஸ்மேன் பந்துவீசுவதற்கு முன்னதாக கிரீஸை விட்டு வெளியேறினால் ரன் அவுட்டாக்கலாம் என்பது நியாயமான ஒன்று தான் என ஐசிசி அமைதி காத்தது. எனினும் இதனால் சர்ச்சைகள் ஏற்படுகிறது என எந்த வீரர்களும் முயற்சி செய்து பார்க்காமல் உள்ளனர்.
இந்நிலையில் "மன்கட்" அதிகாரப்பூர்வமான ரன் அவுட்டாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி யாரும் இதனை நியாயமற்ற செயல், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாது எனக்கூற முடியாது எனவும் எம்சிசி தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல பந்தில் எச்சில் தடுவுவதும் நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள், பந்தில் எச்சிலை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இனி நிரந்தரமாக தடைவிதிக்கப்படுகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பந்தில் எச்சில் தடவினால் ஸ்விங் ஏற்பட பவுலர்களுக்கு உதவும். ஆனால் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை என்பதால் புதிய விதிமுறை வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் தான் தொடங்கவுள்ளது. எனவே அதற்கு மட்டும் ஐசிசி நடப்பு விதிமுறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் எம்சிசி பரிந்துரைத்துள்ளது. மன்கட் விதிமுறை நியாயமான ஒன்று தான் என்ற அஸ்வினின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
22 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
22 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
22 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago