Skip to main content

நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை நுழையலாம்!

Mar 09, 2022 98 views Posted By : YarlSri TV
Image

நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை நுழையலாம்!  

நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிருப்பதாக பிரான்ஸ் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குனரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.



இதன்போது வடக்கு, கிழக்கு பகுதியை சீனா ஆக்கிரமிக்கின்ற அல்லது முழுமையான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்ற போது இராணுவ நடவடிக்கையொன்றை இந்தியா மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா கடந்த காலம் போல் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ஈழத்தமிழர்களின் விடயத்தை அலட்சியம் செய்தால் இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் சிக்கலில் முடியும்.



இப்போதைய நிலைமையில் ஈழத்தமிழ் மக்கள் ஒற்றுமையாக இந்தியாவிடம் கையை காட்ட வேண்டும். இந்தியாவை நோக்கிய ஊர்வலங்களை செய்ய வேண்டும். இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் வருவதற்கு என்றும் வாய்ப்பிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.



அத்துடன், சிங்கள பௌத்த அரசிற்காக இன்று தற்சமயத்தில் சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் யார்? முதலாவது ஜீ.எல்.பீரிஸ், அவருடைய செயலாளர் கொலம்பகே, நீதியமைச்சர் அலிசப்ரி, அதேபோல் இந்தியாவில் இருக்கிறார் மிலிந்த மொரகொட, சீனாவில் பாலித கொகன, அமெரிக்காவில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், முன்னாள் மனித உரிமை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவாவில் சந்திர பெரும ஆகியோரே இவ்வாறு சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை