Skip to main content

ரஷ்யாவின் முயற்சி படுதோல்வி! - உக்ரைன் படையினர் அதிரடி

Mar 09, 2022 93 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யாவின் முயற்சி படுதோல்வி! - உக்ரைன் படையினர் அதிரடி 

உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைய முயற்சித்ததை உக்ரேனிய படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.



இதன்படி, எல்லைக்கு அருகில் 120 ரஷ்ய பராட்ரூப்பர்களின் திட்டமிட்ட நடவடிக்கையை உக்ரைன் படையினர் முறியடித்ததாக ஓலே சினேஹுபோவ் தெரிவித்துள்ளார். அவர்கள் கார்கிவ் நகருக்கு வடகிழக்கே 31 மைல் தொலைவில் தரையிறங்கினார்கள்,



எனினும் உக்ரைன் வீரர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு நகரில் 27 உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.



நாட்டின் இரண்டாவது பெரிய நகரம், 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் இடம், கடந்த மாதம் 24ம் திகதி அன்று போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய விமானத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டது.



இதற்கிடையில், தெற்கு நகரத்தை கைப்பற்ற ரஷ்ய துருப்புக்கள் மேற்கொண்ட பல முயற்சிகளை உக்ரைன் முறியடித்துள்ளதாக மைகோலாயிவ் அதிகாரிகள் கூறுகின்றனர்.   


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை