என் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய நாள் இன்று - நெகிழ்சியாக பேசிய செந்தில் பாலாஜி
Mar 08, 2022 68 views Posted By : YarlSri TV
என் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய நாள் இன்று - நெகிழ்சியாக பேசிய செந்தில் பாலாஜி
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சிதம்பரம் விடுதி கட்டிடத்தில் வேலைதேடும் நபர்களுக்கும், வேலை தரும் தொழில் நிறுவனங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்திவைத்தார்.
தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் "பாலம்" திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி கரூர் மாவட்டத்தில் உள்ள டெக்ஸ்டைல் கொசுவலை பேருந்து கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ள 4000 பணியிடங்களை நிரப்பும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலை தேடும் நபர்களான 25 இளைஞர்களுக்கு, 5 நிறுவனங்களின் உதவியுடன் மேடையிலேயே வேலைவாய்ப்பை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜி - கரூர் மாவட்டத்தில் உள்ள 4000 காலிப்பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் உதவியுடன் நிரப்பப்படவுள்ளன. கரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டை வழங்கும் வகையில் பயிற்சி வகுப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன. வேலை தேடும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் இந்த "பாலம்" திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய நாளாக இந்நாளை கருதுகிறேன். இதேபோல் "அனைவருக்கும் இல்லம்" என்ற திட்டத்தையும் முதல்வர் உதவியுடன் விரைவில் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்த இருக்கிறோம். இந்த இரண்டு முக்கிய திட்டங்களும் சிறப்பாக செயல்பட உள்ளன என்று தெரிவித்தார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago