Skip to main content

உக்ரைனில் ஜனாதிபதி கொல்லப்பட்டாலும் அடுத்தகட்ட திட்டங்கள் தயார் நிலையில்!

Mar 08, 2022 89 views Posted By : YarlSri TV
Image

உக்ரைனில் ஜனாதிபதி கொல்லப்பட்டாலும் அடுத்தகட்ட திட்டங்கள் தயார் நிலையில்! 

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத்தகட்ட திட்டங்களை உக்ரைன் சிறப்பாக வைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 



உக்ரைன் ஜனாதிபதி மற்றும் அவரது அமைச்சர்களின் தலைமை பண்பு மிகச் சிறப்பானதாக உள்ளது. அவர்கள் இந்த இக்கட்டான சூழலிலும் துணிச்சலான உக்ரைன் மக்களின் உருவகமாக இருந்துள்ளனர்.



நான் சமீபத்தில் தான் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் பேசினேன். அவர்கள் அனைத்திற்கும் தாயாராகவே உள்ளனர்.



உக்ரைன் ஜனாதிபதிக்கு ஏதாவது நேர்ந்தாலும் கூட அரசு தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் இயங்க தேவையான அனைத்து திட்டங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.



ரஷ்யா மீது அறிவிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளால் முன்னணி நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகிறது.



இதனால் ரஷ்யாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். ரஷ்யா உடனடியாக இந்தப் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். 



உக்ரைன் நாட்டில் போர் உக்கிரமாகத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை