உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க உதவும் ரஷியா!
Mar 04, 2022 79 views Posted By : YarlSri TV
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க உதவும் ரஷியா!
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியுள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்க 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 9-வது நாளாக இன்றும் போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ,போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்க, மத்திய அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு,பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியுள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்க 130 பேருந்துகள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ரஷியாவின் பெல்கோரோட் பகுதிக்கு அழைத்து வரப்படும் மாணவர்கள் விமானங்கள் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும்,ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago