ரஷ்யாவின் அடுத்த குறி எங்கள் மீது இருக்கலாம்? அச்சத்தில் இரு நாடுகளின் அதிரடி முடிவு
Mar 04, 2022 87 views Posted By : YarlSri TV
ரஷ்யாவின் அடுத்த குறி எங்கள் மீது இருக்கலாம்? அச்சத்தில் இரு நாடுகளின் அதிரடி முடிவு
ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள் சோவியத் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது 9-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதேவேளை ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
உக்ரைனை கைப்பற்றும் பட்சத்தில் தனது நாட்டின் எல்லையில் உள்ள பிற நாடுகளிலும் ரஷ்யா இதுபோன்ற படையெடுப்பை நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் சேராத முன்னாள் சோவியத் நாடுகள் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றன.
ரஷ்யா எல்லையில் ஜார்ஜியா மற்றும் உக்ரைனின் எல்லையில் உள்ள மால்டோவா ஆகிய இரு முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஜார்ஜியா மற்றும் மால்டோவா ஆகிய இரு முன்னாள் சோவியத் நாடுகளும் சேரும் பட்சத்தில் இந்த இரு நாடுகளுக்கும் ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago