தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது: ஜின்பிங்!
Nov 23, 2021 78 views Posted By : YarlSri TV
தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது: ஜின்பிங்!
தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடுத்த முயற்சித்து வருவதாக அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தென்சீன கடல் விவகாரத்தில் சீனவுக்கும், பிராந்தியத்தின் மற்ற நாடுகளுக்கும் இடையில்பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஆசியான் என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையிலான 30 ஆண்டுகால உறவை குறிக்கும் வகையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தென்கிழக்கு ஆசியா மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது என அவர் உறுதிபட தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசுகையில் “சீனா மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியலை உறுதியுடன் எதிர்க்கிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேண விரும்புகிறது மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதியை கூட்டாக வளர்க்க விரும்புகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யாது. சிறியவர்களை கொடுமைப்படுத்தாது” என கூறினார்.


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
850 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
850 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
850 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
850 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
850 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
850 Days ago